🌾ரேஷன் ஒதுக்கீட்டில் மாற்றம் வர இருக்கா?
இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை பெறும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு புதிய வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் — அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் தானியம் வழங்கப்படும் முறையை மாற்றுவது.
📱மொபைல் நம்பர் அப்டேட் செய்யலைன்னா ரேஷன் தடைபடும்!
PMGKAY திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி, வரும் ஆகஸ்ட் 2026 முதல் ரேஷன் மானியத் தொகை நேரடியாக டிஜிட்டல் நாணயம் (CBDC) வடிவில் வழங்கப்படவுள்ளது.
இந்த புதிய முறை சரியாக செயல்பட, உங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் சரியாக இருப்பது அவசியம். மாற்றம் தேவைப்பட்டால் அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று உடனே புதுப்பித்துக் கொள்ளுங்க.
- 1ஆதார் + ரேஷன் கார்டு மொபைல் நம்பர் சரியா இருக்கானு செக் பண்ணுங்க
- 2தவறு இருந்தா உடனே அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று திருத்துங்க
- 3திருத்தம் முடிந்ததும் SMS நோட்டிஃபிகேஷன் வந்ததா உறுதி செய்யுங்க
🏪ரேஷன் கடைகளுக்கே புதிய தோற்றம்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் புதிய தோற்றத்துடன், சொந்த கட்டடங்களில் மறுவடிவமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான மாதிரி வடிவமைப்பையும் அரசு வெளியிட்டுள்ளது.

கருத்துகள்